மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் பத்ரிநாராயணன், கவுதமாலாவில் நடக்கும் உலக பாட்மின்டன் போட்டிக்கு தேர்வாகியும், கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார். இதுவரை நான்கு சர்வதேச போட்டிகளிலும், 20 தேசிய, 30 மாநில போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். நவ., 19 முதல் 27 வரை, கவுதமாலாவில் நடக்க உள்ள பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, விமான கட்டணம், விசா, தங்குமிடத்திற்கு ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 125 கட்ட வேண்டியுள்ளது. இத்தொகையை செலுத்த இயலாத நிலையில் உள்ளார். உதவ விரும்புபவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஆர். பத்ரி நாராயணன், 2/161, அண்ணாமலை நகர், யா.ஒத்தக்கடை, மதுரை – 625 107. போன்:98946 75537.
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.