பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு செப். 30-ம் தேதிக்குள் உதவித் தொகை வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் எஸ்.டி. பிரிவினர் உள்ளிட்டோருக்கு தகுதியின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலாண்டுக்குக்கான உதவித் தொகை செப். 30-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது. இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 2287 பேருக்கு ரூ. 13,08,450, கண்பார்வையற்ற 39 பேருக்கு ரூ. 36,500, மாற்றுத் திறனாளிகள் 167 பேருக்கு ரூ. 3,68,550 உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது என்றார் அவர்.
வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை
Share your accessibility story
Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.